Author: Raja

காரில் குட்கா மூட்டைகளை கடத்தி சென்ற இருவர் கைது

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள கட்டமேடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காருக்குள் பார்த்து சோதனை…

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் சிவாடி ஊராட்சிக்கு உட்பட்டது ஊத்துபள்ளம் கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ண போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறியதாவது; எங்கள் பகுதியில் சுமார்…

தொப்பூர் கணவாயில் பவுடர் ஏத்தி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் படுகாயம்

தொப்பூர் அருகே பவுடர் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் படுகாயம் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பவுடர் மூட்டைகளை ஏற்றிய லாரி ஒன்று சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி நேற்று…

கேரளா வையநாடிற்கு நிவாரண உதவி பொருட்களை தருமபுரி ஆட்சியர் மூலம் கொண்டு சென்ற மை தருமபுரி அமைப்பினர்

மை தருமபுரி அமைப்பின் மூலம் பல்வேறு மனிதநேயமிக்க சமூக சேவைகளை தருமபுரி மாவட்டத்தில் செய்து வருகின்றனர். இயற்கை சீற்ற பேரிடர் காலங்களில் தருமபுரி மாவட்டத்தில் இருந்து முதல் அமைப்பாக சென்று உதவிகளை பல்வேறு மாவட்டங்களில் செய்து வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு…

வழக்கமாக செல்லும் மயான பாதை வழித்தடத்தை விட கோரி சடலத்தை சாலையில் வைத்து கிராம மக்கள்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது மானியத அள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததியர் காலனி பகுதியில் 200க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி சார்ந்தவர் இறந்துவிட்டால் அருகாமையில் அமைந்துள்ள அருந்ததியர் மயானத்தில் அடக்கம் செய்வது வழக்கம்.…

மண் எடுத்து சென்ற டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலி.

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்துள்ள இரயில்வே ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்தவர் கமலேசன் மகன் சுதாகர் (25). இவர் இன்று விடியற்காலை எருமாம்பட்டி செல்லும் சாலையில் இருந்து டிராக்டரில் மண்ணை எடுத்துக் கொண்டு சந்திர நல்லூரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவருடன் உம்மியம்பட்டி…

மேதகு அப்துல் கலாம் நினைவு நாளில் சேவா ரத்னா விருதை பெற்ற மை தருமபுரி அமைப்பினர்

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு சமூக சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் சிறப்பானதோர் சேவையை கடந்த 12 ஆண்டுகளாக தருமபுரி மாவட்டமின்றி பிற மாவட்டத்திலும் செய்து வருகின்றனர் மை தருமபுரி அமைப்பினர். தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக அரசு மருத்துவமனையில்…

சாமிசெட்டிபட்டியில் மருத்துவ இராமதாஸ் பிறந்தநாள் விழா.

சாமிசெட்டிபட்டியில்மருத்துவர் ராமதாஸ் அவர்களின் 86வது பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நட்டு வைத்து மாணவர்களுக்கு நோட்டு பேனா வழங்கினார். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் சாமிசெட்டிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின்…

சாலை விபத்தில் காயம் அடைந்தவரை தன்னுடைய வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற எம்எல்ஏ

தர்மபுரி மாவட்டம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் 86 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிகளில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி.வெங்கடேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு,பேனா…

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை முன்னேற்ற குழு பயிற்சி நடைபெற்றது.

பென்னாகரம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமமான பனைகுளம் கிராமத்தில் கிராம அளவிலான வேளாண் முன்னேற்ற குழு பயிற்சி விவசாயிகளுக்கு நடைபெற்றது. இப்பயிற்சியில் வேளாண்மை துறை யின் சார்பில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திரு.சுப்ரமணியன்…