தொப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இரு இடங்களில் தொடர் திருட்டு திருடர்களுக்கு போலீசார் வலைவீச்சு.

தர்மபுரி மாவட்ட நல்லம்பள்ளியை அடுத்த இராமாயணசின்ன அள்ளியே சேர்ந்தவர் குப்புசாமி(62) ஆகும். இவர் சுயமாக வளையல் வியாபாரம் செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 12 தேதியன்று வீட்டை பூட்டிவிட்டு அருகிலுள்ள சாமி செட்டிபட்டி கிராமத்தில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.இந்த விழாவில் வளையல் வியாபாரம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்த குப்புசாமி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ந்து போனார். வீட்டில் பீரோவில் இருந்த 10 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது.

அதேபோல சாமிசெட்டிபட்டியை அடுத்த கமல நத்தம் கிராமத்தைச் சேர்ந்த வனிதா (32)ஆகும்.இவரும் கடந்த 12 அன்று வீட்டை பூட்டிவிட்டு விவசாய நிலத்தில் வேலைக்கு சென்று வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 1/2 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள்,மற்றும் 35 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனது தெரியவந்தது. இரு ஊர்களிலும் திருடு போனது குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஒரே நாளில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வீடு புகுந்து திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *