தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் காகங்கள் உயிரிழந்து வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. அதேபோன்று தருமபுரி மாவட்டம் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் 10ற்கு மேற்பட்ட காகங்கள் தொடர்ந்து உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து கால்நடை துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தை பொதுமக்கள் சாதாரணமாக நினைக்காமல் சற்று கவனமாக இருக்க வேண்டும்….

