தனியார் மில் ஊழியர்கள் மில் வளாகத்தில் காத்திருப்பு போராட்டம்.
300 குடும்பங்கள் பாதிப்பு என ஊழியர்கள் வருத்தம்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பாகல் அள்ளி கிராமப் பகுதியில் தனியார் ஸ்பின்னிங் மில் செயல்பட்டு வருகிறது. இந்த மில்லில் 250க்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலரும் வேலை செய்து வருகின்றன. இந்த நிலையில் மில் உரிமையாளர் விடியற்காலை 5 மணியளவில் மில்லில் பணிபுரிந்த ஊழியர்களிடம் வெளியே செல்லுங்கள் என கூறியதாக தெரிகிறது. இதனால் எங்கு செல்வது என தெரியாத ஊழியர்கள் பாதி பேர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில் மற்றவர்கள் வெளியில் காத்திருந்தனர்.
இது பற்றி ஊழியர்கள் கூறியதாவது; இந்த மில்லில் 250 க்கு மேற்பட்டோர் பணியாற்றி வருகிறோம்.

எங்களுக்கு குறைந்தபட்சம் 40 வயதிற்கு கடந்தவர்கள் தான் அதிகமாக உள்ளனர். இதில் பெரும்பாலானோர் நிரந்தர பணியாளராக செயல்பட்டு வருகிறோம். இந்த மில்லில் வேலை செய்துதான் எங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறோம். திடீரென நேற்று இரவு பணியில் இருந்த 50 பேரிடம் மில் உரிமையாளர் நீங்கள் அனைவரும் உடனடியாக மில்லில் இருந்து வெளியே செல்லுங்கள் நான் சொன்னால் மட்டும் மீண்டும் வேலைக்கு வாருங்கள் என அலட்சியமாக கூறுகின்றார். இத்தனை ஆண்டுகளாக இந்த மில்லில் வேலை செய்து திடீரென வெளியில் செல்லுங்கள் என கூறினார் எங்கு செல்வது. மில் நிற்காமல் வேலை நடந்து வந்த நிலையில் தற்பொழுது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என காரணத்தை கூறுகிறார். இதனால் எங்கள் வாழ்வாதாரத்திற்கு ஒரு முடிவு தெரியாமல் நாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம் என வருத்தத்துடன் தெரிவிக்கின்றன.
அதனைத் தொடர்ந்து ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் மற்றும் வெளியில் 50 க்கு மேற்பட்ட டூவீலர்களை நிறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

