தருமபுரி மாவட்டத்தின் திராவிட முன்னேற்ற கழகத்தின் மிகவும் முக்கியமான நபராக தடங்கம் சுப்பிரமணி திகழ்ந்து வருகிறார். பல ஆண்டுகளாக தருமபுரி திமுக மாவட்ட செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

இவர் திமுக நிர்வாகிகள் மற்றும் கடைக்கோடி தொண்டர்களையும் நன்கு அறிந்து எளிமையாக பழகக்கூடிய நபர். இதனால் திமுக உறுப்பினர்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தடங்கம் சுப்ரமணியை வேப்பாளராக நிறுத்தினால் எங்களுடைய அனைத்து ஒத்துழைப்பையும் கொடுக்கின்றோம். இதனால் அவர் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக திமுக வட்டாரம் பேசி வருகின்றனர்.
