தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வழியாக இன்று காலை 10 மணிக்கு பெங்களுரில் இருந்து ஈரோடு நோக்கி அரசு பேருந்து 40 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது, மேட்டூரை சேர்ந்த ஓட்டுநர் கோவிந்தராசு (வயது.37) நடத்துநர் நடராஜ் பேருந்தை இயக்கி வந்தனர்.
பாலக்கோடு அடுத்த கோடியூர் நெடுஞ்சாலையில் முன்னால் நின்று கொண்டிருந்த அரசு நகர பேருந்தின் மீது மோதாமல் இருக்க கோவிந்தராஜ் பிரேக் போட்டுள்ளார்.ஏற்கனவே மழை பெய்து கொண்டிருந்த காரணத்தாலும், சாலை வழுவழுப்பாக இருந்ததினாலும்,
திடிர் என பிரேக் போட்டதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் ஒரு சுற்று சுற்றி கவிழ்ந்து விபத்திற்க்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணம் செய்த ராயக்கோட்டையை சேர்ந்த சாலம்மாள் (வயது.33), பனைக்குளத்தை சேர்ந்த்த வெண்ணிலா(வயது.50), பெங்களூரை சேர்ந்த சாந்தி(வயது.55), சீனிவாசன்(வயது.53) சத்யாரத்தினம்(வயது.46) தர்மபுரியை சேர்ந்த பாஸ்கரன்(வயது.36) சேலத்தை சேர்ந்த சிவராஜ்(வயது. 43) மற்றும் ஓட்டுநர்,நடத்துநர் உட்பட 10 ஆண்கள், 10 பெண்கள் என மொத்தம் 20 பேர் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதே பகுதியில் 6 மாதத்திற்க்குள் 4 லாரி 3 பேருந்து என 7 விபத்துக்கள் நடந்துள்ளன,
கடந்த 2 மாதத்திற்க்கு முன் ஜூலை 15ம் தேதி இதே பகுதியில் தனியார் பேருந்தும் லாரியும் மோதி 110 பேர் படுகாயமடைந்தனர்.

திம்மம்பட்டி, சர்க்கரை ஆலை, கோடியூர், மாதம்பட்டி வெள்ளி சந்தை சூடப்பட்டி வரை 15 கிலோ மீட்டர் தூரம் வரை சாலையானது கடந்த 15 வருடங்களாக பராமரிப்பு இல்லாமல் வழுவழுப்பாகி உள்ளதால், சிறிய மழைக்கு கூட பெரிய விபத்து ஏற்பட்டு வருகிறது.
பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபப்பை ஏற்படுத்தி உள்ளது.
